அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா? மதுரை ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் ஆவேசம்
பேச்சுவார்த்தைக்கு வந்த மதுரை ஆட்சியரை அலங்காநல்லூர் மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் தேவையில்லை. நிரந்தர சட்டம் தான் தீர்வு எனக் கூறி இன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு அலங்காநல்லூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து போராட்டக்காரர்களுடன் மதுரை ஆட்சியர் வீரராகவராவ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்தார். இதையடுத்து அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் தேவையில்லை. நிரந்தர சட்டமே தீர்வு எனக் கூறி தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். நிரந்தர சட்டம் பிறப்பிக்கும் வரை போராட்டத்தில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் நிரந்தர சட்டமே தீர்வு என அலங்காநல்லூர் மக்களும் கோஷமிட்டு வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்த விடமாட்டோம் எனவும் அவர்கள் கூறிவருகின்றனர். இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அலங்காநல்லூருக்கு நேரில் சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவசர கதியில் போட்டி நடத்துவதற்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆட்சியரின் பேச்சை ஏற்க மறுத்ததனர். இதனையடுத்து பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாததால் ஆட்சியர் தோல்வியுடன் திரும்பினார். இதனால் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications