மதுரை என்கவுன்டர்: சம்பவ இடத்தில் மாஜிஸ்திரேட் ஆய்வு
மதுரையில் ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் மாஜிஸ்திரேட் ஆய்வு நடத்தினார்.
Recommended Video
மதுரை: சிக்கந்தர்சாவடி பகுதியில் போலீசார் நேற்று நடத்திய என்கவுன்டரில், 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
மதுரை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியில் ஒரு வீட்டுக்குள் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அங்கு விரைந்த சென்ற போலீசார் ரவுடிகளை சரண் அடையுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரவுடிகள் போலீசாரை தாக்க முயற்சித்தனர்.
இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ரவுடிகள் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இருவரின் உடல்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. என்கவுன்டர் நடந்த இடத்தில் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட 2 பேரின் உடல்களையும் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்தார். அவரது அறிக்கைக்குப் பிறகே உடற்கூறு ஆய்வு நடத்தப்படும் என தெரிகிறது.
ரவுடிகள் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இந்நிலையில் உடல்களை பெற கொல்லப்பட்ட இருவரின் உறவினர்களும் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.