மதுரையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி முத்து இருளாண்டியின் மனைவி கைது
மதுரையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி முத்து இருளாண்டியின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

மதுரை: என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி முத்து இருளாண்டியின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை சிக்கந்தர்சாவடி பகுதியில் போலீசார் நேற்று நடத்திய என்கவுன்டரில், 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
மதுரை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியில் ஒரு வீட்டுக்குள் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அங்கு விரைந்த சென்ற போலீசார் ரவுடிகளை சரண் அடையுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரவுடிகள் போலீசாரை தாக்க முயற்சித்தனர்.
இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவுடிகள் மந்திரி என்ற முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் என்கவுன்டர் செய்யப்பட்ட முத்து இருளாண்டியின் மனைவி முத்து லட்சுமி மற்றும் அவரது உறவினர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகியோரை தப்பவிட முயன்ற புகாரில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications