மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்
மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு இருக்கிறது.
மதுரை: மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் இறுதி விசாரணையை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டு இருக்கிறது.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் "மதுரை ஆதீனம் மடம் 2500 ஆண்டு பழமையானது. இதன் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார். கடந்த 2012-ல் பிடுதியில் தியான பீடம் நடத்தி வரும் ராஜசேகர் என்ற நித்யானந்தா ஆதீன மடத்துக்குள் நுழைய முற்பட்டார். சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா தன்னை ஆதீனம் மடத்தின் 293-வது மடாதிபதியாக பிரகடணப்படுத்திக் கொண்டார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் ''நித்யானந்தா மதுரை ஆதீன மடம் உள்பட பல்வேறு சைவ மடங்களை சட்டவிரோதமாக கைப்பற்ற பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறார். இதனால் ஆதீன மடத்துக்குள் நுழையவும், அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு தடை விதிக்கவும், நித்யானந்தாவிடமிருந்து ஆதீன மடத்தை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த அக்டோபர் 11ல் இருந்து மதுரை ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நவம்பர் 23 ஆம் தேதி நீதிபதி மகாதேவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா தரப்பில் எவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கினை இறுதி விசாரணைக்காக டிசம்பர் 7 ஆம் தேதிக்கு (இன்று ) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இன்று விசாரணைக்கு வந்தபோது மதுரை ஆதீனம் மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் எனவும் மேலும் இறுதி விசாரணை மற்றும் தீர்ப்புக்காக வழக்கினை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications