படிப்பு முக்கியம்: மகளிர் கல்லூரிக்குள் புகுந்து ரகளை.. குண்டாஸில் கைதான மாணவருக்கு தேர்வெழுத பரோல்!
மதுரை : பெண்கள் கல்லூரிக்குள் புகுந்து ரகளை செய்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதான பொறியியல் மாணவர் செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக 20 நாட்கள் பரோல் வழங்கி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரிக்குள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மோட்டார் சைக்கிள்களுடன் புகுந்த சில இளைஞர்கள் அங்கிருந்த மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசியும், கல்லூரி காவலாளியை தாக்கியும் அடாவடி செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இதையடுத்து, தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை கைது செய்தனர். இவர்களில் சிலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் கைதான பொறியியல் மாணவர் ஒருவருக்கு இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதவும், அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அவரது தந்தை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரண்ணை முடிவில், மனுதாரர் மகன் பொறியியல் பட்டப்படிப்பில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுத வேண்டியுள்ளதால் ஜூன் 1ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை அவருக்கு பரோல் வழங்கப்படுகிறது. அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உரிய கட்டணத்தை மனுதாரர் ஏற்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மாணவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம். அப்போதும் போலீசார் பாதுகாப்பில் இருக்க வேண்டும். பரோல் முடிந்ததும் வரும் ஜூன் 21ஆம் தேதி மனுதாரர் மகன் மதுரை சிறை சூப்பிரண்டு முன்பு சரண் அடைய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications