பெரியபாண்டிக்கு நகைக்கடை உரிமையாளர்கள் மவுன அஞ்சலி - மதுரவாயலில் கடையடைப்பு
ராஜஸ்தானில் வீரமரணம் அடைந்த பெரியபாண்டிக்கு மதுரவாயலில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து அவரது உருவப்படத்தை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டிக்கு மதுரவாயலில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். தங்கள் கடைகளை அடைத்து உருவப்படத்தை கையில் ஏந்தி மவுன ஊர்வலம் வந்து மரியாதை செய்தனர்.
நகைக்கடையில் கொள்ளையடித்து தப்பிச்சென்ற நாதுராம் ராஜஸ்தானில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்து அவரை பிடிக்கச் சென்ற தனிப்படை போலீஸார், பிடிக்கும் முயற்சியில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணைமுதல்வர் ஓபிஎஸ், டிஜிபி, காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடப்பதை ஒட்டி மதுரவாயலில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து அவரது உருவப்படத்தை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பிரேதப் பரிசோதனைக்கு பிறகு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தது. இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு முதல்வர், காவல் உயர் அதிகாரிகள் கருப்புப்பட்டை அணிந்து அஞ்சலி செலுத்தினர். மாலையில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும்.
இந்நிலையில் மதுரவாயலில் தான் பணியாற்றிய காலத்தில் அன்புடன் பழகிய பெரியபாண்டி அனைவரின் அபிமானத்தையும் பெற்றிருந்தார். நகைக்கடை கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த பெரிய பாண்டிக்கு தங்கள் மரியாதையை தெரிவிக்கும் வகையில் மதுரவாயலில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து பெரியபாண்டியின் உருவப்படத்தை கையில் ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications