மகா சிவராத்திரி: சென்னை சிவ ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம்
சென்னை: மகாசிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் உள்ள சிவன், முருகன், அம்மன் கோவில்களில் இன்று இரவு 4 கால பூஜை நடக்கிறது. பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மல்லீஸ்வரர்,விருபாட்சீஸ்வரர் கோவில், காரணீஸ்வரர், வாலீஸ்வரர் கோவில் வெள்ளீஸ்வரர் தீர்த்த பாலீஸ்வரர் கோவில் என 7 சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சாமி கோவில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில், பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோவில், அனகாபுத்தூர் அகத்தீஸ்வரர் கோவில், பாடி வலிதாயநாதர் கோவில், பாடியநல்லூர் திருநிற்றீஸ்வரர் கோவில், புழல் திருமூலநாதசாமி கோவில், கொளத்தூர் சோமநாத சுவாமி கோவில், அகத்தீஸ்வரர் கோவில்களில் இன்று இரவு நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.
மேலும் மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவில், கச்சாலீஸ்வரர் கோவில், பாரிமுனை ஏகாம்பரேஸ்வரர் கோவில், சென்னை மல்லீஸ்வரர் கோவில், எம்.கே.பி.நகர் ஈஸ்வரன் கோவில், கந்தகோட்டம் முருகன் கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில், திரிசூலம் திருசூலநாதர் கோவில், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோவில், அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோவில், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில், குன்றத்தூர் நாகேஸ்வர சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த கோவில்களில் இன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைபெறும் நான்கு கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுகிறார்கள்.
மேலும் அனைத்து சிவன் கோவில்களிலும் பக்தி சொற் பொழிவு, திருவிளக்கு பூஜை, மாணவ, மாணவிகளின் பரத நாட்டியம், பட்டிமன்றம், தேவாரம், திருமுறை பராயணம், கலசாபிஷேகம், சாட் சாபிஷேகம், இன்னிசை நிகழ்ச்சிகள், பஜனை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.












Click it and Unblock the Notifications