நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் : மைத்ரேயன்
நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று மைத்ரேயன் தெரிவித்தார்.
சென்னை: நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று மைத்ரேயன் எம்பி தெரிவித்தார்.
அதிமுகவிலிருந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திடீரென சசிகலா, தினகரனை ஆதரித்து அவர்கள் பக்கம் சென்றுவிட்டார். இந்நிலையில் தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாஞ்சில் சம்பத், டிடிவி தினகரன் அணியிலிருந்து நேற்று விலகுவதாக அறிவித்தார். அவர் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மைத்ரேயன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நாஞ்சில் சம்பத்தை அதிமுகவில் இணைத்து கொள்வீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது மைத்ரேயன் கூறுகையில் நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம். காவிரி விவகாரத்தில் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்வதால் பலனில்லை என்றார் மைத்ரேயன்.












Click it and Unblock the Notifications