For Daily Alerts
Just In
தீபா அணியில் இல்லை... சசிகலா முதல்வராக மைத்ரேயனும் ஆதரவு!
சசிகலா முதல்வர் பதவியை எப்போது வேண்டுமானாலும் ஏற்பார் என மைத்ரேயன் கூறியுள்ளார். தீபா ஆதரவாளர் என கூறப்பட்ட மைத்ரேயனும் இப்போது சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
சென்னை: சசிகலா எப்போது விரும்புகிறாரோ அப்போது முதல்வர் பதவியை ஏற்பார் என்று ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கைப்பற்றியபோது அதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார் மைத்ரேயன். இதனால் தீபா அணியில் அவர் சேரக் கூடும் என கூறப்பட்டு வந்தது.
இதனிடையே சசிகலா வரும் 12 அல்லது 18-ந் தேதி முதல்வர் பதவி ஏற்க கூடும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் பங்கேற்ற மைத்ரேயன், சசிகலா எப்போது முதல்வராக விரும்புகிறாரோ அப்போது முதல்வர் பதவியை ஏற்பார். இதில் நாங்கள் எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.
மைத்ரேயனும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் மன்னார்குடி கோஷ்டி மகிழ்ச்சியில் இருக்கிறதாம்.
Comments
English summary
ADMK MP Maitreyan said that ADMK was ready for general secretary Sasikala to take over as the CM of Tamil Nadu.
Story first published: Monday, January 9, 2017, 16:42 [IST]