ஸ்டாலினை சந்தித்தார் மக்கள் தேமுதிகவின் சந்திரகுமார்: இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு ?
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் இன்று மாலை சந்தித்து பேசினார். மக்கள் தேமுதிக கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால் தேமுதிவில் கலகக்குரல் வெடித்தது.

மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததற்கு, தேமுதிக கொள்கை பரப்பு செயலராகச் செயல்பட்டு வந்த வி.சி.சந்திரகுமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை கட்சியிலிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீக்கினார்.
இந்த நிலையில் தேமுதிக அதிருப்தியாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சந்திரகுமார் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், 4 மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக்கு பின்னர் "மக்கள் தேமுதிக' எனும் புதிய அமைப்பை உருவாக்குவதாக சந்திரகுமார் நேற்று அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார், தேமுதிகவை உடைக்க வேண்டும் என்பது நோக்கம் இல்லை. இப்போதுகூட திமுகவுடன் கூட்டணி அமைக்கிறோம் என்று விஜயகாந்த் கூறினால், அவரது காலில் விழுந்துகூட மன்னிப்பு கேட்டு, அரசியலில் இருந்தே விலகிவிடுகிறோம்.
திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும் அழைப்பு விடுத்தால், கூட்டணி அமைக்கத் தயார் என்று கூறினார்.
இன்று கோபாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் தேமுதிகவினர் வந்தால் திமுக தலைவர் கருணாநிதி சந்திப்பார் என்று கூறினார்.
இதனையடுத்து இன்று மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார், தேமுதிகவில் இருந்து விலகிய பார்த்தீபன், சி.எச்.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயித்தில் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் மக்கள் தேமுதிக கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications