For Daily Alerts
Just In
சிவகங்கையில் 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சிக்கிய மாணவர்
சிவகங்கை: சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் கையும், களவுமாக சிக்கினார்.
தமிழகம் மற்றும் புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் இன்று துவங்கியது. தேர்வு மையங்களுக்கு சென்று பறக்கும் படையினர் மாணவ, மாணவிகளை கண்காணித்தனர்.
இந்நிலையில் சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளிக்கு பறக்கும் படையினர் சென்றனர். அங்கு பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவ, மாணவிகளை அவர்கள் கண்காணித்தனர். அப்போது அலெக்சாண்டர் என்ற மாணவனை பிடித்து விசாரித்தபோது அவர் ஆள்மாறாட்டம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவருடைய வினா மற்றும் விடைத்தாள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மாணவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் தேர்வு அறையில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
English summary
A 10th standard student who indulged in malpractice during final exam was caught red handed at a private school in Sivaganga on wednesday.
Story first published: Wednesday, March 26, 2014, 17:36 [IST]