பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி காலமானார் !!
சென்னை: பிரபல தொழிலதிபரும், முன்னாள் எம்.பியுமான எம்.ஏ.எம். ராமசாமி உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
103 ஆண்டு கால பாரம்பரியம் மிகுந்த செட்டிநாடு சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வந்தவர் ராமசாமி. 84 வயதான அவருக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய நிலைமை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததது. இந்நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேறமும் ஏற்படாததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செட்டிநாடு அரண்மனை முதல் குதிரைப் பந்தயம் வரை ராமசாமி தொடாத துறை இல்லை. ஜாம்பவானாக திகழ்ந்து வந்த அவர் கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீப காலமாக ராமசாமியைச் சுற்றிலும் சர்ச்சைகளும் வெடித்தன.
தனது வளர்ப்பு மகனான எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை இனிமேல் எனக்கு இவர் பிள்ளையே இல்லை என்று அறிவித்தார் ராமசாமி. மேலும் ஸ்பிக் நிறுவன தலைவர் ஏசி முத்தையாவே செட்டிநாடு சாம்ராஜ்யத்தை கவனித்துக் கொள்வார் என்றும் அறிவித்திருந்தார். 2012 ம் ஆண்டு "போர்பஸ்' வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்களில், இவர் 88வது இடம் பெற்றிருந்தார். அப்போது இவரது குடும்ப சொத்து மதிப்பு 4,300 கோடி என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications