35 வயதாகியும் மணமாகவில்லை... விரக்தியில் ஆசிட் குடித்த தொழிலாளி பலி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மணமாகவில்லையே என்ற ஏக்கத்தில் 35 வயது தொழிலாளி ஒருவர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகன் ஜெயகர் (வயது 35). இவர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டி கிராமத்தில் தனியார் மாம்பழக்கூழ் ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனவேதனையுடன் இருந்துள்ளார் ஜெயகர். சம்பவத்தன்று மாம்பழக்கூழ் ஆலையில் சுத்தப்படுத்த பயன்படுத்தும் திராவகத்தை எடுத்து குடித்து ஜெயகர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மற்ற ஊழியர்களால் உடனடியாக மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெயகர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட, ஜெயகர், அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications