ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர் மர்ம மரணம்- திருவண்ணாமலையில் உறவினர்கள் சாலை மறியல்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவருடைய உறவினர்கள் திருவண்ணாமலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
2013 ஆம் ஆண்டு செம்மரம் வெட்டச் சென்றதாக கைது செய்யப்பட்டு ஆந்திராவிலுள்ள காளஹஸ்தி சிறையில் அடைக்கப்பட்டவர் செங்கத்தை சேர்ந்த ரத்தனிம்.

இவர் ஆந்திரா சிறையில் தவித்து வந்தார். அவர் திடீரென்று சிறையிலேயே மரணமடைந்தார் என்று தெரிவித்த அதிகாரிகள் உடலையும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி செங்கம்-அரூர் சாலையில் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications