குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கி இறந்த மதுரை நபர் உடல் மீட்பு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையின் காரணமாக தென்காசி,செங்கோட்டை,கடையநல்லூர்,உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் அருவி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு தென்காசி,குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை சுமார் மணி நேரம் நீடித்தது.இம்மழையின் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அப்போது 100க்கும் மேற்பட்டோர் மற்றும் மதுரையை சார்ந்த 4 பேர் குளித்துக் கொண்டிருந்தனர்.தண்ணீர் அருவியில் அதிகமாக கொட்டுவதை அறிந்த அனைவரும் அருவியை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
இதில் மதுரையை சார்ந்த ஆத்மாராவ் என்பவர் அருவி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.இதுக் குறித்து தகவல் அறிந்த குற்றாலம் காவல்துறையினர் விரைந்து வந்து அருவிப் பகுதியில் அதிக பவர் கொண்ட விளக்கு மூலம் அவரை தேடினர்.பின்னர் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அவரைத் தேடினர்.

அவரது உடலோ எதுவும் கிடைக்க வில்லை இதுகுறித்து தென்காசி கோட்டாட்சியர் வெங்கடேஷ் அப்பகுதிக்கு விரைந்து வந்து காவல்துறையினர்,தீயணைப்புத் துறையினர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.இரவு நேரமாதலாலும், அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்ப்பட்டது.
இன்று காலை தென்காசி,செங்கோட்டை தீயணைப்புத் துறையினர் தீவீர தேடுதல் நடத்தினர்.அப்போது அவரது உடல் குற்றால நாதர் ஆலயத்தின் அருகில் உள்ள பாலத்தின் கீழ் செடிகளுக்குள் பிணமாக கிடந்தார்.அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஆத்மா ராவ் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.












Click it and Unblock the Notifications