தண்டவாளத்தில் நின்று சண்டை... ரயில் மோதி இளைஞர் பலி... பெண் காயம்... மருத்துவமனையிலிருந்து மாயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தண்டவாளத்தில் நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவர் மீது மின்சார ரயில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் பலியானார். அவருடன் சண்டை போட்ட பெண் காயமடைந்தார்.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரும்புலியூர் செல்லும் வழியில் நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தில் நின்றபடி ஒரு இளைஞரும், 30 வயதுடைய பெண்ணும் சண்டை போட் டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கடற்கரையில் இருந்து செங்கல் பட்டு செல்லும் ரயில் அவர்கள் மீது மோதியது.

இதில், சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தலையில் காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த பெண்ணின் செல்போன் மூலம் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தனர்.

Man died in train accident

அதேபோல், இறந்தவரின் பர்ஸில் இருந்த முகவரியை வைத்து அவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பாஸ்கர் (26) என்பது தெரிந்தது.

இதற்கிடையே, சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் திடீரென மாயமானார்.

பாஸ்கருக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன பிரச்சினை, எதற்காக அவர்கள் தண்டவாளத்தில் நின்று சண்டை போட்டனர் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக தலைமறைவான அப்பெண்ணையும் போலீசார் தேடி வருகின் றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+