'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்... போலீசில் புகார் செய்த கணவர்
ஈரோடு: மிஸ்டு கால் ஒன்றின் மூலம் பழக்கமான திருமணமான ஆணும், பெண்ணும் தங்களின் துணைகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு மிஸ் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள குன்னத்தூரில் உள்ள கிரானைட் கல் அறுக்கும் கம்பெனியில் பணி புரிபவர் பழனிச்சாமி (வயது 27). இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு மாத கைக்குழந்தை உள்ளது. சந்தியா தற்போது தனது பெற்றோர் வீட்டில் உள்ளார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு பழனிச்சாமியின் செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. அந்த செல்போன் எண்ணுக்கு பழனிச்சாமி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த செல்போனில் கிருஷ்ணகிரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒசாலி என்ற இடத்தை சேர்ந்த முனிரத்தினம் (26) என்ற பெண் பேசினார்.
முதலில் சகஜமாக பேசிய முனிரத்தினமும், பழனிச்சாமியும் பின்னர் தொடர்ச்சியாக ஒருவருக்கொருவர் சகஜமாக செல்போனில் பேச ஆரம்பித்தனர். நாளடைவில் இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியது.
முனிரத்தினத்துக்கு திருமணமாகி ஜெயக்குமார் என்ற கணவரும், 7 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஜெயக்குமார் பால் வியாபாரம் செய்துவருகிறார்.
எனினும் பழனிச்சாமியை நேரில் பார்க்காமலேயே கள்ளக்காதலை முனிரத்தினம் தொடர்ந்தார். கள்ளக்காதலனை நேரில் சந்திக்க முனிரத்தினம் விரும்பினார். குன்னத்தூரிலேயே தனி குடித்தனம் நடத்தலாம் என்று கூறி பழனிச்சாமியும் சம்மதம் தெரிவித்தார்.
காதல் ஜோடி எஸ்கேப்
இதைத் தொடர்ந்து முனிரத்தினம் தனது கணவர் மற்றும் மகன், மகளை தவிக்க விட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு குன்னத்தூருக்கு வந்தார். அங்கு பழனிச்சாமியும், முனிரத்தினமும் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தினர்.
கணவர் புகார்
இதற்கிடையே தனது மனைவியை காணவில்லை என்று ஜெயக்குமார் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முனிரத்தினத்தை தேடினர். அப்போது முனிரத்தினம் குன்னத்தூரில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாலக்கோடு போலீசார் குன்னத்தூருக்கு வந்தனர். குன்னத்தூர் போலீசாரின் உதவியுடன் முனிரத்தினத்தை தேடினர்.
அப்போது முனிரத்தினமும், பழனிச்சாமியும் தனிக்குடித்தனம் நடத்துவது உறுதியானது. அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொள்வதை போலீசார் அறிந்தனர். ஆனால் அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மிஸ்டுகால் ஒன்றின் மூலம் பழக்கமாகி கடைசியில் ஊரைவிட்டே மிஸ்ஆகி வந்த முனிரத்னம் பற்றி குன்னத்தூரில் பரபரப்பாக பேசப்படுகிறதாம்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications