மனித முகம் கொண்ட அரிய வகை ஆந்தை.. செங்கல்பட்டு குடியிருப்பிற்கு வந்ததால் பரபரப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் அருகே மனிதனின் முகம் போல் தோற்றம் கொண்ட அரிய வகை ஆந்தையை கூட்டம் கூட்டமாக மக்கள் பார்த்துவிட்டு சென்றனர்.
Recommended Video
மனிதமுகம் போன்ற அமைப்பு கொண்ட அரியவகை ஆந்தை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் காத்தான் தெருவில் உள்ள ஒரு ஆலமரத்தின் மேல் இருந்து ஒரு ஆந்தை கீழே விழுந்தது.

அந்த ஆந்தை மனிதனின் முகம் போன்ற அமைப்பு கொண்ட அரியவகையாக இருந்தது. என்ன காரணத்தாலோ அதனால் பறந்து செல்ல முடியாமல் மக்கள் குடியிருப்பு அருகே விழுந்துள்ளது.

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அரியவகை ஆந்தையை காட்டுப் பகுதியில் விடுவதற்கு மக்கள் அங்கிருந்து மீட்டு சென்றனர். பார்ப்பதற்கு மனிதர்களின் முகம் போல அமைப்பு கொண்ட ஆந்தை கீழே விழுந்த தகவல் அந்த பகுதியில் தீயாய் பரவியதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த ஆந்தையை பார்த்து சென்றனர்.
இந்த வகை ஆந்தைகள் பிரிட்டனில் முதல் முறையாக 1976 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்தைக்கு இரவு நேரத்தில்தான் கண்கள் தெரியும் என கூறுவார்கள்.












Click it and Unblock the Notifications