கல்யாணத்திற்கு பயந்து விமான நிலைய மாடியிலிருந்து குதித்த இளைஞர்!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் முருகன் . முருகன் இன்று காலையில் சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கு அவரது உறவினர்கள் வந்தனர். முருகனிடம், திருமண ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், திருமணம் முடிந்த பின்னர் சிங்கப்பூர் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதில் உடன்பாடில்லாத முருகன் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், உறவினர்கள் அதற்கு ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் விமானத்தைப் பிடிப்பதற்காக உறவினர்களை மீறி வேகமாக போனார் முருகன். ஆனால் அதற்குள் விமானம் கிளம்பிப் போய் விட்டது.
இதனால் மனமுடைந்த முருகன் விமான நிலைய மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். படுகாயம் அடைந்த முருகனுக்கு விமான நிலைய மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருமணத்திற்காக உயிரை இழக்க நினைத்த இளைஞரின் இச்செயலால் அக்குடும்பத்தினர் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications