கடையம் அருகே கல்லால் அடித்து மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி படுகொலை
நெல்லை: கடையம் அருகே கல்லால் தாக்கி கூலித்தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த பொட்டல்புதூர் வடக்கு புதுமனைதெருவில் உள்ள சாக்கடையில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
கல்லால் தாக்கி முகம் சிதைக்கபட்ட நிலையில் பிணத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சிவமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலையான வாலிபர் அதே பகுதியை சேர்ந்த சலீம் (வயது40) கூலித்தொழிலாளி என்பது தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி அலிபாத் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
சலீம் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சலீம் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளார். செவ்வாய்கிழமையன்று நள்ளிரவில் மர்மநபர்கள் சலீமை கல்லால் தாக்கி கொலை செய்து சாக்கடையில் வீசி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாலிபரும் மனநிலை பாதிக்கபட்டவர் என்பதால் சலீமுக்கும், பிடிபட்ட வாலிபருக்கும் ஏற்பட்ட தகராறில் சலீம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாராவது சலீமை கொலை செய்தார்களா? என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் கடையம், பொட்டல்புதூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications