சென்னையில் இரு சிறுமிகளை ஒரே நேரத்தில் பலாத்காரம் செய்த 68வயது முதியவர்!
சென்னை: குடிபோதையில் 2 சிறுமிகளை ஒரே நேரத்தில் பலாத்காரம் செய்த 68 வயது கட்டிட தொழிலாளி, சென்னை, தரமணியில் கைது செய்யப்பட்டார்.
சென்னை, தரமணி பகுதியிலுல்ள மகாத்மா காந்தி தெருவில் வசிப்பவர் முகமது பாபு (68). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் சனிக்கிழமை இரவு, டாஸ்மாக்கில், வயிறுமுட்ட குடித்துவிட்டு, தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டுக்கு அருகே இரு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்தார் முகமது பாபு. சிறுமிகள் தனியாக இருப்பதை பார்த்த முகமது பாபு, சாக்லேட் தருவதாக ஏமாற்றி, தனது வீட்டுக்குள் இரு சிறுமிகளையும் அழைத்துச் சென்றுள்ளார்.
வீட்டுக்குள் சென்றதும், இரு சிறுமிகளையும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பலாத்காரம் செய்துள்ளார் முகமது பாபு. மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மிரட்டி அனுப்பியுள்ளார்.
ஆனால் சிறுமிகள் இருவரும், தங்களது பெற்றோரிடம் நடந்ததை சொல்லி அழுதுள்ளனர். ஆத்திரமடைந்த சிறுமிகளின் பெற்றோர், அதுகுறித்து தரமணி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் முகமது பாபுவை, நேற்று, கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
இதனிடையே, தாம்பரத்தின் சுற்றுவட்டார பகுதிகளான ஊரப்பாக்கம், வைகை நகர் மெயின்ரோடு பகுதியிலுள்ள 2 வீடுகளிலும், கொல்லக்கரை தெருவிலுள்ள ஒரு வீட்டிலும் கதவை உடைத்து புகுந்த திருடர்கள், மொத்தம் 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5300 ரொக்கப் பணத்தையும் திருடிவிட்டு தப்பியோடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications