திருச்சியில் பரபரப்பு படுகொலை- முன்விரோதத்தால் ஒருவரை வெட்டிச் சாய்த்த 5 பேர் கும்பல்!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் 5 பேர் கொண்ட கும்பலால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கிராப்பட்டி பகுதியில் கடந்த ஒரு மாதம் முன்பு பிரபல ரவுடியான ஒத்தகை கை வினோத் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மூன்று பேர் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இக்கொலை வழக்கில் சிறையில் உள்ள சாமுவேல் என்பவரின் உறவினர் ஏபேல் ரொமரியோவை எடைமலைபட்டிபுத்தூர் பாலத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications