டெஸ்ட் ட்ரைவ் பார்க்கலாமா?… ரூ 30,000 மதிப்புள்ள பைக்கோடு 'ஜூட்' விட்ட வாலிபர்!
வேலூர்: ஷோரூமில் இருந்த பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்வதாகக் கூறி நூதனமாக திருடிச் சென்ற இளைஞரை ராணிப்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நவல்பூரை சேர்ந்த வஜ்ஜிரவேலு ஆட்டோ பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், தனக்கு புதிய பைக் வாங்க வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வஜ்ஜிரவேலு கடையில் இருந்த பைக்குகள் ஒவ்வொன்றாக பார்த்து வந்த அந்த இளைஞர், ரூ 30 ஆயிரம் மதிப்புள்ள பைக் ஒன்றைக் காட்டி தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பைக்கை ஓட்டிப் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
வாலிபரின் பேச்சை நம்பிய வஜ்ஜிரவேலு, வாகனத்தை ஓட்டிப் பார்க்கும் படி அதன் சாவியை அந்த இளைஞரிடம் கொடுத்துள்ளார்.
சாவியை வாங்கிய இளைஞர் வண்டியை எடுத்துக் கொண்டு காணாமல் போய்விட்டார். வாகனத்துடன் சென்றவர் எப்படியும் திரும்பி வருவார் என இரண்டு நாட்கள் காத்திருந்திருக்கிறார் வஜ்ஜிரவேலு. பின்னர், இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரையடுத்து நூதன முறையில் பைக்கை தேடிச் சென்ற வாலிபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications