திமுகவின் மனித சங்கிலி போராட்டத்திற்கு ஜவாஹிருல்லாவும் ஆதரவு
27ம் தேதி நடக்கும் மனித சங்கிலி போராட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜூலை 27 ம் தேதி திமுக சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரவு அளிக்கும் என எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை!

'நீட்' தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை மாநில மத்திய அரசுகள் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 27-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் "மனித சங்கிலி போராட்டம்" நடத்துவது என்று திமுக தீர்மானித்துள்ளது.
ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பைப் பறிக்கவும், தமிழகத்தில் தழைத்து நிற்கும் சமூகநீதி கொள்கைக்கு முடிவு கட்டவுமே மத்திய பாஜக தலைமையிலான மக்கள் விரோத அரசால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை மனிதநேய மக்கள் கட்சி ஆரம்பம் முதலே எடுத்துரைத்து வருகிறது.
தமிழகத்தில் இதுபோன்ற தேர்வுகளால் சமூகநீதி குலையாமல் பாதுகாத்திட ஜனநாயக அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்று ஆதரவளித்து வருகிறது.
ஜூலை 27-ல் திமுக சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கும் மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரவு அளிக்கிறது. மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் மனிதசங்கிலி போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியினர் பெருமளவில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இப்போராட்டம் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்துத்தரப்பு மக்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள் விடுக்கின்றது.
எங்களது ஆதரவு மாணவ இயக்கமான சமூக நீதி மாணவர் இயக்கமும் இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் பங்கேற்கும் என தெரிவித்துக் கொள்கிறோம். என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
-
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. காங்கிரஸ் பாணியில் விசிகவின் வியூகம் கைகொடுக்குமா -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழி ஆர்வம்.. எந்த தொகுதி? ஸ்டாலின் கையில் முடிவு -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
சட்டம் ஒழுங்கு பிரச்சனை அஸ்திரத்தை கையிலெடுத்த அதிமுக கூட்டணி .. மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின்












Click it and Unblock the Notifications