For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரியின் குறுக்கே புதிய அணை... மன்னார்குடியில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

Google Oneindia Tamil News

திருவாரூர்: காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடியில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், நாகை மாவட்டத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டு வருகிறது.

Mannargudi: Farmers protest against Karnataka

இந்நிலையில், இன்று காலை 6.40 மணி முதல் மன்னார்குடியில் இருந்து மானாமதுரை செல்லும் ரயிலைமறித்து சுமார் 500க்கும் மேற்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், மன்னார்குடி அருகே உள்ள தட்டார் மடம் , கோட்டூர் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர்,நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாகப்படினம் நகரில்வியாபாரிகள் கடையடைப்பு செய்துள்ளனர்.

English summary
In Mannargudi in Thiruvarur district, the farmers staged a rail roko to condemn Karnataka's plan to build dams across river Kauveri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X