மனுஷ்யபுத்திரனுக்கு கலைஞர் விருது.. திமுக அறிவிப்பு
சென்னை: திமுக சார்பில் வழங்கப்படும் விருதுகளைப் பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெறும். அப்போது விருதுகள் வழங்கப்படும்.
இந்த வருடத்திற்கான விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
2015ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் தி.மு.கழக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது ஆண்டிமடம் எஸ்.சிவசுப்பிரமணியம் அவர்கட்கும் அண்ணா விருது பெங்களூரு வி.தேவராசன் அவர்கட்கும் பாவேந்தர் விருது திருமதி பவானி இராஜேந்திரன் அவர்கட்கும் கலைஞர் விருது மனுஷ்யபுத்திரன் அவர்கட்கும் வழங்கப்படும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications