செங்கம்.. பட்டாசு குடோனில் பெரும் தீவிபத்து - 2 பேர் பலி?
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் இன்று பட்டாசு கிட்டங்கி ஒன்றில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பலர் படுகாயமடைந்தனர்.
செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசு கிட்டங்கி ஒன்று உள்ளது. இங்கு இன்று மதியம், தீவிபத்து ஏற்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின.
வெடிச் சத்தத்தில் அருகில் இருந்த பல கட்டடங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. விபத்தில் உள்ளே இருந்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உயிரிழப்பு குறித்து தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீபாவளி சமயம் என்பதால் தமிழகத்தில் பல இடங்களில் பட்டாசுத் தயாரிப்பு மும்முரமாக உள்ளது. இதில் சிவகாசி மற்றும் விருதுநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் நகரில் இந்த பட்டாசு ஆலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட பட்டாசு கிட்டங்கி முறையான அனுமதியுடன் இயங்கியதா அல்லது சட்ட விரோதமானதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications