Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜீவ் காந்தி படுகொலை பாணியில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி- புனே போலீஸ் 'திடுக்'

பாணியில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி என்கிறது புனே போலீஸ்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி- வீடியோ

    புனே: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பாணியில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக புனே போலீசார் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் கடந்த ஜனவரி 1-ந் தேதி கோரேகான் யுத்த வெற்றியின் 200-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. 200 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமணர்கள் படையை தலித்துகள் படையான மகர் சேனை கோரேகானில் வீழ்த்தியதன் நினைவாக இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

    Maoists plot to assassinate Modi, claim Pune police

    அப்போது பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக பேராசிரியர் சோமா சென் உட்பட 5 பேரை புனே போலீசார் கைது செய்தனர். இந்த 5 பேரையும் காவலில் எடுக்க புனே நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

    இம்மனு மீதான விசாரணையின் போது கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களின் இ மெயிலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த பாணியில் பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆகையால் இது தொடர்பாக விசாரிக்க 5 பேரையும் போலீஸ் காவலுக்கு அனுப்ப வேண்டும் என வாதிடப்பட்டது.

    புனே போலீசாரின் இந்த திடுக்கிடும் தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+