அன்புமணி, சைலேந்திரபாபு உட்பட 16,000 பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம்... சென்னையில்!
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், போலீஸ் அதிகாரி சைலேந்திரபாபு உட்பட சுமார் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
விப்ரோ மற்றும் சென்னை ரன்னர்ஸ் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சென்னை மாரத்தான் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான 4-வது சென்னை மராத்தான் பந்தயம் இன்று நடந்தது.
இதில், 42.2 கிலோ மீட்டர் தூரத்துக்கான முழு மராத்தான், 21.1 கிலோ மீட்டர் தூரத்துக்கான அரை மாரத்தான், 10 கிலோ மீட்டர் ஓட்டம் ஆகிய 3 பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது.

முழு மாரத்தான்...
முழு மராத்தான் ஓட்டம் அதிகாலை 4 மணிக்கு கஸ்தூரிபாய் ரயில் நிலையம் அருகே இருந்து தொடங்கியது. அதேபோல், அரை மாரத்தான் 4.30 மணிக்கும், 10 கி.மீட்டர் தூரத்துக்கான ஓட்டம் நேப்பியர் பாலத்தில் இருந்து காலை 7 மணிக்கும் தொடங்கியது.

16 ஆயிரம் பேர்...
3 பிரிவுகளில் நடந்த இந்த மாரத்தான் ஓட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், போலீஸ் அதிகாரி சைலேந்திரபாபு உட்பட சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பாதை...
மத்திய கைலாஷ், அடையாறு பாலம், எம்.ஆர்.சி. நகர், சாந்தோம், மெரீனா, போர் நினைவு சின்னம் பாதைகளில் நடந்த மராத்தான் ஓட்டப்பந்தயம், சி.பி.டி. மைதானத்தில் முடிவடைந்தது.

ஆண்கள் பிரிவில்...
இந்தப் பந்தயத்தில் முழு மராத்தான் ஆண்கள் பிரிவில் பந்தய தூரத்தை 2 மணி 35 நிமிட நேரத்தில் கடந்து ஜெகதீசன் வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து வரவ நாதன் 2 மணி 41 நிமிடங்களில் கடந்து 2-வது இடத்தையும், நாகேஷ் பவார் 2 மணி 44 நிமிடத்தில் கடந்து 3-வது இடத்தையும் பிடித்தனர்.

பெண்கள் பிரிவில்...
இதேபோல், முழு மராத்தான் பெண்கள் பிரிவில் சைலஜா ஸ்ரீதர் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 3 மணி 49 நிமிட நேரத்தில் ஓடி கடந்தார். ஹெலினா 3 மணி 54 நிமிட நேரத்திலும், சினேகா 4 மணி 20 நிமிட நேரத்திலும் கடந்து முறையே 2-வது, 3-வது இடங்களை பிடித்தனர்.

ரூ. 15 லட்சம் பரிசு...
இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.15 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மொத்தம் 36 பேருக்கு இந்தப் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. முழு மாரத்தானில் வெற்றி பெற்ற வீரருக்கு ரூ.1 லட்சமும், வீராங்கனைக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது.

முதல் 5 இடங்கள்...
இதே போல அரை மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரமும், 10 கிலோ மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.35 ஆயிரமும் வழங்கப்பட்டது. முதல் 5 இடங்கள் வரை பரிசு வழங்கப்பட்டது.

வயதானவர்களுக்கும் பரிசு...
இதேபோல் இந்த போட்டியில் பங்கேற்று முதல் 3 இடங்களை பிடித்த 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
எண்ணிக்கை உயர்வு...
கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற மாரத்தானில் 6500 பேரும், 2013-ல் 10 ஆயிரம் பேரும், 2014-ல் 12,500 பேரும் பங்கேற்றனர். தற்போது இந்த எண்ணிக்கை 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications