ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் எதிரொலி- மெரினாவில் போலீஸ் தடை
ஜாக்டோ - ஜியோ போராட்டம் நடைபெறுவதையொட்டி சென்னை மெரினாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : ஜாக்டோ - ஜியோ அரசு ஊழியர்கள் அமைப்பின் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், சென்னை மெரினாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா சர்வீஸ் சாலையிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
7வது ஊதியக் குழு முரண்பாடுகளை நீக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற ஐந்து அம்க்ச கோரிக்கைகளை வலியுறுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ இன்று கோட்டை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்து இருந்தது.

இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல ஊழியர்கள் நேற்று இரவு முதல் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று காலை முதல் சென்னை வாலாஜா சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலையில் கோட்டையை நோக்கி போராட்டத்தை துவங்கினர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து வருகின்றனர்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கோட்டைக்கு வரும் மெரினா சாலையை போராட்டக்காரர்கள் தடுக்கக்கூடும் என்பதால் அங்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மெரினாவிற்கு செல்லவும், மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications