50 மில்லியன் மக்களின் தகவலை திருடிய பேஸ்புக்.. கைதாகிறார் மார்க் ஜூக்கர்பெர்க்?
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன மோசடி பெரிதாகி வருவதை அடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன மோசடி பெரிதாகி வருவதை அடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரஷ்யா
அமெரிக்க தேர்தலில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று 1 வருடம் முன்பே சர்ச்சை உருவானது. ரஷ்யாதான் அதிபர் டிரம்ப்பின் வெற்றிக்கு பின் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ரஷ்யா, பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் மூன்றும் இணைந்து மக்களின் தகவல்களை திருடி தேர்தல் முடிவுகளை மாற்றி உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் சம்மன்
இந்த நிலையில் அமெரிக்காவில் எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் சிலர் மார்க் ஜூக்கர்பெர்க் மீது வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். முதற்கட்டமாக இதில் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பி உள்ளார்கள். இவ்வளவு நாள் அமெரிக்க தேர்தலில் முறைகேடு நடக்கவில்லை என்று பொய் சொல்லியது ஏன் என்றுள்ளார்கள்.

சோதனை
அமெரிக்காவில் மட்டுமில்லாமல் பிரிட்டனிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கிறது. பிரிட்டன் தகவல் தொடர்பு ஆணையர் எலிசபெத் டென்ஹாம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு எதிராக வாரண்ட் வாங்கியுள்ளார். அதன்படி இன்றும் நாளையும் பேஸ்புக் தலைமையகம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன தலைமையகம் இரண்டிலும் சோதனை நடத்தப்பட இருக்கிறது.

கைது செய்யப்படலாம்
இந்த சோதனையின் முடிவில் பேஸ்புக் நிறுவனர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் இந்த கைது சம்பவம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இது உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், மற்ற நாடுகள் கைது நடவடிக்கையில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications