Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்காசியில் ஜவுளி கடையில் பயங்கர தீ: லட்சக்கணக்கான மதிப்புள்ள துணிகள் சாம்பல்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தென்காசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள பிரபலான ஜவுளிக் கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான மதிப்புள்ள துணிகள் தீயில் கருகி நாசமாயின.

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே 4 மாடிகள் கொண்ட பிரபலமான ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் கடை மூடப்பட்டது.

Massive Fire in textile shop

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் கடையின் உள்ளே இருந்து கரும்புகை வெளிவந்தது. இதைக்கண்ட காவலாளி, தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். காற்று வேகமாக வீசியதால், கடையின் உள்ளே தீ ‘மளமள'வென கடை முழுவதும் பரவியது. கடை முழுவதும் துணிகள் அனைத்தும் குவித்து வைக்கப்பட்டிருந்ததால், தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

இதுகுறித்து உடனடியாக தென்காசி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்தபோது, வேகமாக தீ பரவியது. இதைத்தொடர்ந்து சுரண்டை, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், பாளையங்கோட்டை, ஆலங்குளம் மற்றும் நெல்லை டவுன் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+