காவிரி மேலாண்மை வாரியம் கோரி சாஸ்திரி பவன் முற்றுகை - மே 17 இயக்கத்தினர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட மே 17 இயக்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருமுருகன் காந்தி தலைமையில் மே 17 இயக்கத்தினர் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தாமதப்படுத்திய மத்திய பாஜகவைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் மே 17 இயக்கத்தினர் சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கோஷமிட்டனர். போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர் மட்டுமில்லாமல், கல்லூரி மாணவர்கள், பெண்கள் பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலர் சாஸ்திரி பவன் அலுவல பதாகைகளை காலணிகளால் அடித்தும், மோடியின் புகைப்படத்தை தீயில் போட்டு எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் கலவர சூழல் உருவானதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளது. எனினும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.தமிழனின் வரிப்பணம் இனிக்குது ; காவிரி வாரியம் அமைக்கக் கசக்குதா ?என்றும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications