Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவரை பற்றி துப்பு தந்தால் பரிசு.. மயிலாடுதுறை விஸ்வநாதர் கோயில் செக்யூரிட்டி கொலை.. போலீஸ் அதிரடி

மயிலாடுதுறை கோயில் கொலை வழக்கு குறித்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: கோயிலில் கொள்ளை அடிக்க வந்து, அங்கிருந்த பாதுகாவலரையும் கொலை செய்துவிட்டு தப்பிய மர்மநபர் எங்கே தலைமறைவாக இருக்கிறார் என்றே தெரியவில்லை.. இதையடுத்து அந்த கொலையாளி பற்றி துப்பு தந்தால் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை போலீசார் அறிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில், இந்து சமய அறநிலை சொந்தமான விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் உள்ளது.

இந்தக் கோவிலில் இரவு நேர பாதுகாவலராக சாமிநாதன் என்பவர் வேலை பார்த்தார்.. அவருக்கு 55 வயதாகிறது.. கோயிலிலேயே தங்கி பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்தார்..

ஏமாற்றம்

ஏமாற்றம்

இந்த நிலையில் கடந்த மே மாதம் 9ம் தேதி மர்ம நபர் ஒருவர் கோயிலில் சுவரேறி குதித்து, கடுமையாக சாமிநாதனை தாக்கி உள்ளார்.. அத்துடன், கோவில் சன்னதி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோவையும், சில்வர் உண்டியலையும் உடைத்துள்ளார்.. ஆனால், அந்த உண்டியலில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

வழக்கு

வழக்கு

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கையிலெடுத்தனர்.. உயிருக்கு போராடி கொண்டிருந்த சாமிநாதனை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர்.. சாமிநாதனை மர்ம நபர் தாக்கிவிட்டு தப்பும் காட்சி கேமராவில் பதிவாகி இருந்தது.. இதனிடையே சிகிச்சை பலனின்றி சாமிநாதன் மே 14-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

 தலைமறைவு

தலைமறைவு

எனவே, இந்த வழக்கை கொலை வழக்காக மயிலாடுதுறை போலீசார் பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேட ஆரம்பித்தனர்.. ஆனால் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.. கொலை நடந்து 6 மாதம் ஆகியும் குற்றவாளி சிக்காததாலும், எந்தவித துப்பும் கிடைக்காததாலும், அந்த கொள்ளையன் பற்றி எந்த விவரமும் தெரியாததாலும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.

ரொக்கப்பரிசு

ரொக்கப்பரிசு

அதன்படி, மயிலாடுதுறை கோயில் கொள்ளை வழக்கில் தகவல் தருபவர்களுக்கு ரூ.10000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை போலீஸார் அதிரடியாக அறிவித்துள்ளனர்.. இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளரை 8778347770 என்ற எண்ணிலும், மயிலாடுதுறை காவல் ஆய்வாளரை 9442003309 என்ற எண்ணிலும், காவல் உதவி ஆய்வாளரை 9498164710 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க மயிலாடுதுறை போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+