இவரை பற்றி துப்பு தந்தால் பரிசு.. மயிலாடுதுறை விஸ்வநாதர் கோயில் செக்யூரிட்டி கொலை.. போலீஸ் அதிரடி
மயிலாடுதுறை கோயில் கொலை வழக்கு குறித்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்
மயிலாடுதுறை: கோயிலில் கொள்ளை அடிக்க வந்து, அங்கிருந்த பாதுகாவலரையும் கொலை செய்துவிட்டு தப்பிய மர்மநபர் எங்கே தலைமறைவாக இருக்கிறார் என்றே தெரியவில்லை.. இதையடுத்து அந்த கொலையாளி பற்றி துப்பு தந்தால் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை போலீசார் அறிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில், இந்து சமய அறநிலை சொந்தமான விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் உள்ளது.
இந்தக் கோவிலில் இரவு நேர பாதுகாவலராக சாமிநாதன் என்பவர் வேலை பார்த்தார்.. அவருக்கு 55 வயதாகிறது.. கோயிலிலேயே தங்கி பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்தார்..

ஏமாற்றம்
இந்த நிலையில் கடந்த மே மாதம் 9ம் தேதி மர்ம நபர் ஒருவர் கோயிலில் சுவரேறி குதித்து, கடுமையாக சாமிநாதனை தாக்கி உள்ளார்.. அத்துடன், கோவில் சன்னதி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோவையும், சில்வர் உண்டியலையும் உடைத்துள்ளார்.. ஆனால், அந்த உண்டியலில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

வழக்கு
இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கையிலெடுத்தனர்.. உயிருக்கு போராடி கொண்டிருந்த சாமிநாதனை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர்.. சாமிநாதனை மர்ம நபர் தாக்கிவிட்டு தப்பும் காட்சி கேமராவில் பதிவாகி இருந்தது.. இதனிடையே சிகிச்சை பலனின்றி சாமிநாதன் மே 14-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

தலைமறைவு
எனவே, இந்த வழக்கை கொலை வழக்காக மயிலாடுதுறை போலீசார் பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேட ஆரம்பித்தனர்.. ஆனால் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.. கொலை நடந்து 6 மாதம் ஆகியும் குற்றவாளி சிக்காததாலும், எந்தவித துப்பும் கிடைக்காததாலும், அந்த கொள்ளையன் பற்றி எந்த விவரமும் தெரியாததாலும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.

ரொக்கப்பரிசு
அதன்படி, மயிலாடுதுறை கோயில் கொள்ளை வழக்கில் தகவல் தருபவர்களுக்கு ரூ.10000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை போலீஸார் அதிரடியாக அறிவித்துள்ளனர்.. இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளரை 8778347770 என்ற எண்ணிலும், மயிலாடுதுறை காவல் ஆய்வாளரை 9442003309 என்ற எண்ணிலும், காவல் உதவி ஆய்வாளரை 9498164710 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க மயிலாடுதுறை போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications