For Daily Alerts
Just In
பிளஸ் 2 முடிவுகள் தாமதம்.... மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்திவைப்பு
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 17ஆம் தேதி வெளியாக இருப்பதால் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இவற்றில் மாணவர்களை சேர்க்க விண்ணப்ப படிவங்கள் மே 9 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி தள்ளிப்போகிறது. வழக்கமாக மே முதல்வாரத்தில் வெளியாகும் பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் இந்த ஆண்டு மே 17ஆம் தேதி வெளியாகிறது. எனவே மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்ப விநியோகத்துக்கான புதிய தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
Comments
English summary
Application for MBBS to be postponed for the academic year 2016-17.
Story first published: Saturday, May 7, 2016, 15:23 [IST]