சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் மதிமுக: அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் நியமனம்
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு மதிமுக ஆயத்தமாக வருகிறது. முதற்கட்டமாக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளராக சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் சே.செவந்தியப்பன் உயர்நிலைக்குழு உறுப்பினராக காஞ்சீபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் க.சோமு நியமிக்கப்படுகிறார்.
அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக குடியாத்தம் என்.பன்னீர் நியமிக்கப்படுகிறார்.
வேலூர் மாவட்டச் செயலாளராக வ. கண்ணதாசன் நியமிக்கப்படுகிறார். மதுரை புறநகர் மாவட்டப் பொறுப்பாளராக டாக்டர் பா.சரவணன் நியமிக்கப்படுகிறார்.
மறுமலர்ச்சி ஆபத்து உதவிகள் செயலாளராக டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் நியமிக்கப்படுகிறார்.
அண்ணாநகர் பகுதிக் கழகப் பொறுப்பாளராக ராம.அழகேசன் நியமிக்கப்படுகிறார்என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.