மதிமுக ஊடக விவாதக்குழு ஒருங்கிணைப்பாளரானார் மின்னல் முகமது அலி...
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மதிமுக ஊடக விவாதக்குழு தொடர்பாளர்களின் ஒருங்கிணைப்பாளராக மின்னல் முகமது அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் மதிமுக சார்பில் பங்கேற்கும் ஊடக விவாதக்குழுவினர் 20 பேரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, ஊடக விவாதக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மல்லை சத்யா, வழக்கறிஞர் ஆவடி அந்தரிதாஸ், ஆ.வந்தியத்தேவன், வழக்கறிஞர் நன்மாறன், கோவை. வே. ஈஸ்வரன், மதுரை வழக்கறிஞர் அழகு சுந்தரம், தி.மு.ராஜேந்திரன் திருநெல்வேலி, மணவை தமிழ் மாணிக்கம் திருச்சி, விடுதலை வேந்தன் தஞ்சாவூர், எஸ். பெருமாள் சாமி, பொறியாளர் கா. பாண்டியராஜன், பொறியாளர் நல்லூ. ஆர். லிங்கம், பாலாஜி, சட்டக்கல்லுரி, சசிகுமார் சட்டக்கல்லூரி, சிலம்பரசன், வழக்கறிஞர், பொறியாளர் தீபன் பழனிச்சாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தனமணி வெங்கடபதி, டாக்டர் ரொகையா ஷேக் முகமது, பேராசிரியை பாத்திமாபாபு ஆகிய மகளிரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகக் குழு விவாத தொடர்பாளராக மின்னல் முகமது அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications