எச். ராஜா பின்னணியில் அமித்ஷா, மோடி.. வைகோ குற்றச்சாட்டு!
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கொடுக்கும் தைரியத்திலேயே எச். ராஜா செயல்படுவதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கொடுக்கும் தைரியத்திலேயே எச். ராஜா தமிழகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : தமிழ்நாடு பிராமணர் சங்கம் எச். ராஜாவிற்கு கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. பெரியார் மையம் இடிக்கப்பட்ட போது பிரதமர் வாஜ்பாயிடம் முறையிடப்பட்டது.
திராவிடர் கழகம் தேர்தலில் நிற்கவில்லை என்றதும் வாஜ்பாய் பெரியார் சமூக நீதிப் போராளி என்று கூறி பெரியார் மையம் இடிக்கப்பட்ட ஆயிரம் மடங்கு விலைமதிப்புள்ள இடத்தை அப்பல்லோ மருத்துவமனைக்கு பின்புறம் தர முன்வந்தார்.

வாஜ்பாய், அத்வானிக்கு தெரியும்
பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாயே பெரியார் சமூக நீதிப் போராளி என்று பாராட்டியவர். நான் பாஜக முழுவதையும் விமர்சிக்கவில்லை, பெரியார் மையம் இடிக்கப்பட்டதற்கு அத்வானி அன்று தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

எச். ராஜாவின் விஷமத்தனம்
பெரியார் மையத்திற்கே அப்படி, ஆனால் இன்று எச். ராஜாவின் கருத்தால் அன்றைய தினமே திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதனை பார்த்த ஒரு டீக்கடைக்காரர் பிடித்து சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு கொடுக்க வேண்டியவற்றை கொடுத்துள்ளார்.

யார் தைரியம் கொடுத்தது
எச். ராஜா பெரியாரை விமர்சிப்பதற்கான தைரியத்தை யார் கொடுத்தது. எச். ராஜா பேசுவது அவருடைய கருத்தல்ல பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவினுடைய கருத்து. பெரியாரைப் பற்றி தவறாக கருத்து கூறிய எச். ராஜா மீது அமித்ஷா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

இன்றும் ராஜா சர்ச்சை கருத்து
பெரியார் சிலை பற்றி பேசிய சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே இன்று காலையில் தமிழைப் பெரியார் மதிக்காதவர் என்று மீண்டும் பேசியுள்ளார் எச். ராஜா. தமிழ் எழுத்துகளில் சீர்திருத்ததை கொண்டு வந்தவர் தந்தை பெரியார் என்பதை வரலாற்றை பார்த்தால் தெரியும் என்றும் வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications