மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... நாளை சென்னையில்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ளது.
இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் காலை 10 மணிக்கும் நடைபெறும்.

மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் எஸ்.துரைசாமி தலைமை வகிப்பார் என்று வைகோ கூறியுள்ளார்.
கூட்டணி உள்பட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக கட்சியினருடன் இக்கூட்டத்தில் வைகோ ஆலோசிக்கவுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications