For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாட்டுக்கறி விருந்து கொடுத்து தாக்குதலுக்கு ஆளான சூரஜ் - வைகோ நேரில் ஆறுதல் - வீடியோ

மாட்டிறைச்சி விவகாரத்தில் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் ஐஐடி சூரஜை, வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விவகாரத்தில் தாக்கப்பட்ட ஆய்வு மாணவர் சூரஜை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மத்திய அரசு, மாடுகளை இறைச்சிக்காக வாங்கவோ விற்கவோ கூடாது என பசுவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ரு வருகின்றன.

Mdmk general secretary Vaiko went and met Sujar, IIT student

இந்நிலையில், இந்த தடை சட்டத்தை எதிர்த்து, சென்னை ஐஐடியில் உள்ள பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். அதை சூரஜ் என்ற ஆய்வு மாணவர் ஒருங்கிணைத்துள்ளார். இதைக் கண்டு வெகுண்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான 'எபிவிபி'யைச் சேர்ந்த மணீஷ் குமார் என்ற மாணவரும் இன்னும் சில மணவர்களும் சேர்ந்து சூரஜைத் தாக்கியுள்ளனர்.

இதனால் சூரஜ் கண் கடுமையாக பாதிக்கப்பட்டு, மேலும் பல இடங்ளில் பலத்த காயம் அடைந்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சூரஜை மருத்துவமனையில் சந்தித்து ஐஐடி வளாகத்தில் நடந்த விவரங்களை கேட்டுத் தெரிந்துள்ளார். மேலும் அவருக்கு ஆறுதல் கூறினார்.

English summary
Mdmk general secretary Vaiko went and met Sujar, IIT student who was brutally attacked by Abvp student in Chennai IIT campus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X