ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: மதிமுக புறக்கணிப்பு- வைகோ! யாருக்கும் ஆதரவும் இல்லை!!
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை தமது கட்சி புறக்கணிப்பதாகவும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்கிறது என அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் எந்த கட்சியின் வேட்பாளருக்கும் மதிமுக ஆதரவு அளிக்காது எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் திமுக, ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக, பாஜக, மேட் பேரவை தீபா, நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடவில்லை; யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்துள்ளன. இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் குறித்து மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் இன்று கூடி ஆலோசித்தது.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலர் வைகோ, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்கிறது; அங்கு எந்த கட்சியின் வேட்பாளருக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு இல்லை என அறிவித்துள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக, தமாக ஆகியவற்றுடன் வைகோவை ஒருங்கிணைப்பாளராக கொண்ட மக்கள் நலக் கூட்டணி தேர்தலை சந்தித்தது. சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications