மதிமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு.. 19 முதல் வைகோ பிரசாரம்
சென்னை: மதிமுக தனது வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுவது உறுதியாகி விட்டது. 19ம் தேதி முதல் வைகோ தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
பாஜக கூட்டணியில் பெரும் இழுபறிக்குப் பின்னர் 7 தொகுதிகளை மதிமுக வாங்கியுள்ளது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் (தனி), ஈரோடு, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி (தனி) ஆகிய இடங்கள் அ்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நாளை நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் வைகோ தனது கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகிறார். அதன் பின்னர் 19ம் தேதி முதல் வைகோ தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
அவரது பிரசார திட்டம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது.
வைகோ விருதுநகரில் போட்டியிடுகிறார். ஈரோட்டில் கணேசமூர்த்தி நிறுத்தப்படுவார். காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா போட்டியிடுகிறார். ஸ்ரீபெரும்புதூரில் டாக்டர் மாசிலாமணி, தூத்துக்குடியில் ஜோயல் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது.