சென்னையில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு சிகிச்சையளிக்க மருத்துவக்குழு அமைப்பு
சென்னையில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு சிகிச்சையளிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை: பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு சிகிச்சையளிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி 17 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு சிகிச்சையளிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவக்குழுவில் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.
மனநல மருத்துவர், மன நல ஆலோசகர், குழந்தைகள் நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர் உள்ளிட்டவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சிறுமிக்கு காவல்துறை அனுமதியுடன் சிறப்பு மருத்துவக்குழு சிகிச்சை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போலீசார் கூறும் இடத்தில் வைத்து சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications