மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம் முடக்கம்... சிபிசிஐடி விசாரிக்கிறது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்ட விவகாரம் குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் மர்ம நபர்களால் ஹேக் செய்து முடக்கப்பட்டதால் உலக அளவில் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இணையதள சேவையும் பாதிப்படைந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து இந்த இணையதளம் முடக்கப்பட்டிருக்கலாம் என்ற காரணத்தாலும், இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை தேவை என்பதாலும் விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளதாக மதுரை மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications