மேகதாட்டுவில் மார்ச் 7 ஆம் தேதி போராட்டம் நடத்த காவிரி போராட்டக் குழு முடிவு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: காவிரி உரிமை மீட்புக் குழு இயக்கம் சார்பாக, கர்நாடக மாநிலம் மேகதாட்டுவில் நடத்தவுள்ள போராட்டத்திற்கான பரப்புரையை தஞ்சையில் பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்ட உள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காவிரி உரிமை மீட்புக்குழு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மேகதாட்டுவிற்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவதென அந்த இயக்கத்தினர் முடிவு எடுத்துள்ளதை அடுத்து, அதற்கான பரப்புரை நேற்று தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் மார்ச் மாதம் 7 ஆம் தேதி பேரணி தொடங்குவதாகவும், 10 ஆம் தேதி மேகதாட்டுவில் போராட்டம் நடைபெறும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications