அடேங்கப்பா.. இதுதாண்டா மெய்யாலுமே மெர்சல். 'தலை'யின் அதிரிபுரி ரகசியம் அம்பலம்!
மெர்சல் விவகாரத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல் இது.
Recommended Video
சென்னை: மெர்சலுக்கு எதிராக அதிகமாக 'தலை'யிடம் இருந்து சவுண்டு மட்டும் வருகிறது.. ஆனால் ஆர்ப்பாட்டம் அமர்க்களம் போராட்டம் என எதுவுமே இல்லையே...எங்கேயோ இடிக்குது என விசாரித்தால் மெய்யாலுமே மெர்சலாகிவிட்டது நமக்கு கிடைத்த சேதி.
சென்னைக்கு அந்தாண்ட பக்கத்து கூவக்கரையோரத்து கேளிக்கை கூடத்து பிள்ளைதான் 'தலை'க்கு பினாமி லக்கேஜாம். டீசெண்ட் பாலிடிக்ஸ் பற்றி பேரல் கணக்காக பாடம் நடத்தும் தலையின் இல்லீகல் ஒர்க் அத்தனையையும் அந்த பிள்ளையாண்டா வசம்தான் ஒப்படைச்சிருக்கிறாராம்.
கேளிக்கை துறையின் அத்தனை விஷயங்களும் அந்த பிள்ளையாண்டாளுக்கும் அத்துப்படி.. அப்படித்தான் மெர்சலுக்குள்ளும் தலையின் முதலீட்டை பிள்ளையாண்டா போட்டிருக்கிறார். மெர்சலும் கல்லா கட்டப் போகிற நேரத்தில் திடுதிப்பென கலாட்டா வர தலைக்கு தூக்கி வாரிப் போட்டது.
ஆகா நம்ம தலைக்கு மேல கத்தியா? அல்லது நம்மளை குறிவெச்ச உள்குத்தானா? தலை சுதாரிக்கிறதுக்குள்ள விவகாரம் விஸ்வரூபமாகிவிட்டது. இதில் மெர்சலாகிப் போன தலை வழக்கமான சவுண்டு ஆட்டத்தை சளைக்காமல் போட்டிருக்கிறார்.
அதேநேரத்தில் ஆட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம், எரிப்பு என பிள்ளையாண்டா மூலமாக போட்ட முதலுக்கு மோசம் வராமலும் கவனமாக பார்த்துகிட்டாராம்.. ஏனெனில் பிள்ளையாண்டாவையும் முக்கிய பொறுப்பில் வெச்சிருக்கிறதால "தலைகள்" சப்தம் மட்டும்தானாம்.. கீழே எல்லாம் சப்சேடா சைலண்ட் மோடாம்.
இதுதான் தலைநகரத்து ஹாட் டாபிக்!