மீட்டர் வட்டியால் பலியாகும் உயிர்கள்!

Subscribe to Oneindia Tamil

Meter vatti claims poor people's lives
கரூர்: கரூர் மாவட்டத்தில் மீட்டர் வட்டி, மின்னல் வட்டி போன்ற பல வட்டி பிரச்சனைகளால் அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்பட்டு வருகின்றது.

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி, மீட்டர் வட்டி, மின்னல் வட்டி என பல்வேறு வகையில் வட்டித் தொழில் ராஜநடை போட்டு வருகின்றது. இதனால் பல அப்பாவி மக்கள் உயிர் இழந்த போதும் போலீசாரின் தூக்கம் மட்டும் இன்று வரை கலைந்தபாடு இல்லை.

அரசியல் புள்ளி ஒருவரிடம் கரூர் தேகமலை பெருமாள்பட்டியைச் சேர்ந்த விஜய் ஆனந்த் ரூ. 58,000 கந்து வட்டிக்கு வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லையாம்.

இதனால் அந்த அரசியல் புள்ளி தனது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் விஜய் ஆனந்த் வீட்டிற்கு சென்று கடன் தொகை ரூ.58 ஆயிரம் ரூபாய்க்கு 6 மாத வட்டியுடன் சேர்த்து ரூ. 2 லட்சத்து 75 லட்சம் ரூபாயை உடனே தந்தாக வேண்டும் என தங்களது பாணியில் மிரட்டியுள்ளார்.

அத்துடன் அவரது மனைவியைப் பற்றி சுயமரியாதையை பாதிக்கும் வகையில் நக்கல் அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விஜய் ஆனந்த் முதலில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அதில் உயிருக்கு போராடி பிழைத்துக் கொண்டார். பின்பு, தனது வீட்டில் ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் அரசியல் புள்ளியை சிறைக்கு அனுப்பவதில் போலீசார் முனைப்பு காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தனது குடும்பத்திற்கு நீதி வேண்டும் என விஜய் ஆனந்தின் மனைவி கரூர் மாவட்ட கலெக்டரிம் மனு அளித்துவிட்டு காத்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது தீபவாளி பண்டிகை நேரம் என்பதால் மீட்டர் வட்டி, மின்னல் வட்டி போன்றவைகள் அதிக அளவில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+