மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்துகளை இயக்க ஏற்பாடு.. முதல்வர் எடப்பாடியார் அறிவிப்பு

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதியதாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல்-நேரு பூங்கா மற்றும் சின்னமலை- டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்தியமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹர்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னேறியுள்ளோம்

முன்னேறியுள்ளோம்

இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குதிரை வண்டி, மாட்டு வண்டியில் இருந்து மெட்ரோ ரயில் சேவைக்கு முன்னேறியுள்ளோம் என்றார்.

பயண நேரம்

பயண நேரம்

மேலும் அவர் பேசியதாவது, மெட்ரோ ரயில் இதுவரை 1.64 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். பயண நேரத்தை குறைக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

அதிநவீன வளர்ச்சிதான்

அதிநவீன வளர்ச்சிதான்

மெட்ரோ ரயில் சேவைக்கான நிதியை மத்திய அரசு விரைவில் வழங்க வேண்டும். போக்குவரத்தில் அதி நவீன வளர்ச்சிதான் மெட்ரோ ரயில். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ரயிலில் பயணம்

ரயிலில் பயணம்

மேலும் 6 குளிரூட்டப்பட்ட சுரங்கப்பாதை ரயில் நிலையங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து எழும்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+