புத்தாண்டுக்கு சென்னையில் விடிய, விடிய மெட்ரோ ரயில் ஓடும் - நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு விடிய, விடிய மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை உள்ளது. வழக்கமாக கோயம்பேடு, ஆலந்தூர் ஆகிய இரு மார்க்கங்களிலும், காலை 6 மணிக்கு ரயில்கள் இயக்கம் துவங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும். விடுமுறை, பண்டிகை நாட்களில் பயணிகளின் நலன் கருதி கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.

இந்நிலையில் இம்மாதம் 31 ஆம் தேதி இரவு 12 மணிக்கு பிறக்கும் ஆங்கில புத்தாண்டை கடற்கரை, கோவில், ஓட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் கொண்டாடுவர்.அவர்களுக்கு வசதியாக கூடுதல் ரயில்கள் இயக்க நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி ஒருவர், "கோயம்பேடு - ஆலந்தூர் இடையே அதிகாலை 1:30 மணி வரை, ஆலந்துார் - கோயம்பேடு இடையே அதிகாலை 2 மணி வரை கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்க உள்ளோம். 15 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் என சேவை இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கும், கூடுதல் ரயில்களை இயக்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். காணும் பொங்கல் தினத்தன்று, பெரும்பாலானோர் குடும்பத்துடன் சுற்றுலா இடங்களுக்கு செல்வர். மெட்ரோ ரயிலில் பயணிப்பதும் சுற்றுலாவாக உள்ளதால் பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications