8 ஆண்டுகள் கழித்து அதிகபட்ச நீரை எட்டியது மேட்டூர் அணை!
மேட்டூர் அணை கடந்த 8 ஆண்டுகளில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 117 அடி உயரம் நீர் மட்டத்தை எட்டியுள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணை கடந்த 8 ஆண்டுகளில் இந்த ஆண்டு அதிகபட்சமான நீர் அளவை எட்டியுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரவு மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் காவிரி ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்ததால் கர்நாடகா அரசு கபினி கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டது. இதையடுத்து மேட்டூர் அணையில் நீர்மட்டம் 102 அடியைத் தாண்டியபோது ஜூலை 19 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட்டார்.

தற்போது மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் பாசனத்துக்காக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதே நேரத்தில் கர்நாடகா அரசு கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 77 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடப்பட்டுடுவருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருவதால் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117 அடியாக உள்ளது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இன்று இரவுக்குள் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் மேட்டூர் அணை இதுவரை எத்தனை முறை திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் எத்தனை முறை நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது என்பதை சிறிது திரும்பிப் பார்ப்போம்.
இதுவரை மேட்டூர் அணை 85 முறை திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை கடந்த 8 ஆண்டுகளில் 2011 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 116.01 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.
2013 மற்றும் 2014 ஆண்டுகளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியுள்ளது. 2015, 2016, 2017 ஆண்டுகளில் மேட்டூர் அணை 100 அடியை கூட எட்டவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications